வாழிய யாழ்நகர் இந்துக்கல் லூரி வையகம் புகழ்ந்திட என்றும் இலங்கை மணித்திரு நாட்டினில் எங்கும் இந்து மதத்தவர் உள்ளம் இலங்கிடும் ஒருபெருங் கலையகம் இதுவே இளைஞர்கள் உளம் மகிழ்ந் தென்றும் கலைபயில் கழகமும் இதுவே -பல கலைமலி கழகமும் இதுவே- தமிழர் தலைநிமிர் கழகமும் இதுவே ! எவ்விட மேகினும் எத்துயர் நேரினும் எம்மன்னை நின்னலம் மறவேம் என்றுமே என்றுமே என்றும் இன்புற வாழிய நன்றே இறைவன தருள்கொடு நன்றே! ஆங்கிலம் அருந்தமிழ் ஆரியம் சிங்களம் அவைபயில் கழகமும் இதுவே! ஓங்குநல் லறிஞர்கள் உவப்பொடு காத்திடும் ஒருபெருங் கழகமும் இதுவே ! ஒளிர்மிகு கழகமும் இதுவே! உயர்வுறு கழகமும் இதுவே! உயிரன கழகமும் இதுவே ! தமிழரெம் வாழ்வினில் தாயென மிளிரும் தனிப் பெருங் கலையகம் வாழ்க ! வாழ்க! வாழ்க! வாழ்க தன்னிகர் இன்றியே நீடு தரணியில் வாழிய நீடு.